Sunday 29 December 2013

ஒவ்வொரு துளியிலும் உன் நினைவுகள்


ஒவ்வொரு துளியிலும்
உன் நினைவுகள் சிதறுகின்றன...

பொதுவாக நான்தான் வற்புறுத்தி உன்னை
வெளியே அழைத்துப் போயிருக்கிறேன்.
மொக்க ஸ்டேடஸ்-க்கு நிஜ பெண் ஐடி லைக் போடுவது போல
சில நேரங்களில்தான் நீயாக முன்வந்து
பார்க்குக்குப் போகலாமா என்பாய்...
அன்றும் அப்படித்தான் பீச்சுக்கு போகலாமா என்றாய்.



பீச் என்றதும் சுண்டல்,
குடை போல் வளைந்து நிழல் தரும் காதலிகள்,
பொரித்த மீன்,
வத்தல்பொடி தடவிய மாங்காய் துண்டு,
பலூன்கள்,
குதிரைகள்,
இத்யாதி இத்யாதிகள் இப்போது
ஞாபகத்துக்கு வருவதில்லை.
நீதான்...

மறுப்பேனா...
உன் அழைப்புகள் ஒவ்வொன்றும் எனக்கு
சுவர்க்கத்தைக் காட்டியிருக்கின்றன.
அன்றைய அழைப்பு உனக்கே சுவர்க்கத்தைக்
காட்டி விட்டதே...

நாம் சுற்றிய இடங்களில் நிறைய தொலைத்திருக்கிறோம்..
பென், பர்ஸ், கர்சீப், ஏன் செல்போன் கூட தொலைத்துவிட்டு வந்திருக்கிறோம்..
உன்னைத் தொலைத்ததை எப்படி மறப்பேனடி...

தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டுமாம்
உன்னை சுனாமியில் தவற விட்டுவிட்டேன்
இனி எங்கே தேடுவேன்?

ஒவ்வொரு துளியிலும்
உன் நினைவுகள் சிதறுகின்றன...

No comments:

Post a Comment